Thursday, October 7, 2010

தீய பழக்கம் விடுபட பரிகாரம் என்ன

"சமிபத்தில் ஒரு ஜோதிட இதழில் வந்த ஒரு தாயின் வேதனை கட்டுரை .
தன் மகனை உயர் படிப்பு படிக்க வடஇந்தியாவில் உள்ள சிறந்த கல்வி நிலையத்திற்கு அனுப்பி தன் மற்ற பிளைகளைபோல இவனும் உயர்ந்த நிலைக்கு வருவான் என்ற கனவோடு இருந்த அந்த தாய்க்கு  அங்கே அவன் போதை ஊசி போட்டு உடலையும்,படிப்பையும் கெடுத்துக்கொண்டு இருந்ததை வெளியிட்டு அதற்கு என்ன பரிகாரம் செய்தால் பலன் கிடைக்கும் என பையன்  ஜாதகத்தை என் சீடர்கள் கொடுத்து இதற்கு பரிகாரம் எழுத சொல்லி தங்களுக்கும் பயன்படும் என்பதால் அந்த கட்டுரையை படித்தேன்.உண்மையில் ஒரு தாயின் நோக்கில் பார்க்கும்போது வேதனைதான்ஜோதிடர் என்ற முறையில் பார்க்கும் போது இந்த பையன் பிறந்த அட்சராம்சத்தில் பிறந்த எந்த குழந்தையும்  ஏதாவது ஒரு தீய பழக்கம் இருக்கும். (இதே லக்னமாகவும் இருக்கவேண்டும்).இதே சந்திரன் பாதம் ஆகவும் இருக்கவேண்டும்.

ஜனனம்-1985 -11 -29 .......11 .16 AM .
கிரகம்       ராசி            அம்சம்

லக்              மகரம்       சிம்மம்
சூரி              விரு           துலா
சந்                மிது             துலா
செவ்           கன்              கன்
புதன்           விரு           துலா
குரு             மக               மிது
சுக்               விரு            கட
சனி             விரு            கன்
ராகு             மேஷ         சிம்
கேது            துலா         கும்
எந்த ஒரு தோஷமும், சாபமும்,தீய பழக்கமும் முன்வினை பயனை கொண்டே இந்த ஜென்மத்தில் நடக்கும். இந்த பையன் ஜாதகத்தில்  சென்ற ஜென்மத்தில் குரங்குக்கு விஷம் வைத்து கொன்றதால் இந்த ஜன்மத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது, என்பதை ஜாதகத்தில் லக்னத்தில் உள்ள குருவும், லக்னமும் பறை சாற்றுகிறது. எமது PHR -ன் GV சிஸ்டத்தில் அம்சம் பிரதானம். நடப்பு திசையை லக்னமாக கொண்டு பார்க்கவேண்டும். எனவே மிதுனத்தில் இருந்து குரு தசை நடப்பதால் 5 ம் இடம் துலாம் இதில் சந். சூரி. புதன்.  சுக்+சந்.பரிவர்த்தனை .  சூரி. புதன் இரண்டும் சனி சாரம் பெற்று சுட்சமத்தில் கேது ஆகிறார். 5 -ம் இடம் மகிழ்ச்சி, விருப்பம் இவைகளை குறிக்கும் இடம். சுக்.மிதுனத்திக்கு 2 மிடத்தில் (குடிக்குமிடம் .4 போஜனம் )இருப்பதாலும் பரிவர்த்தனை பெற்ற சந்திரன் , லக் +குரு இரண்டும் சந்திரன் சாரத்தில் உள்ளதாலும் ,அம்சத்தில் லக்கனத்தில் குரு இருப்பதாலும் தன் நிலை மறந்த நிலையில் உள்ளார்.லக்னத்தில்(ராசி) குரு மனோ காரகன் சந்.சாரம் பெற்று நீச்சம் அடைவதும், தனித்த குரு லக்னத்தை கெடுப்பதும் காரணம்.

ஈரேழு உலகத்திக்கும் பரிகாரம் பூமி என்பதால் அனைத்துக்கும் பரிகாரம் உண்டு. எந்த கிரகத்தால் ஒருவருக்கு பாதிப்பு ஏற்படுகிறது என தெரிந்து கொண்டு அந்த கிரகத்தின் control  எந்த கிரகத்திற்கு என்பதை அறிந்து கொண்டால்,அந்த கிரகத்தின் மூலமாக பரிகாரம் செய்தால் வெற்றி நிச்சயம். (உ -ம் ) MLA -வால் முடியாத காரியம் மந்திரியால் முடியும் என்பதைப்போல இந்த பையனின் மனநிலை எனும் 5 ம் இடத்திற்கு நிவர்த்தி ஸ்தானம் மேஷம் .மிதுனதித்கு 11 ம்   இடம் மேஷம். மேஷத்தின் அதிபதி செவ்வாய் இங்கு புதனின் control .எனவே பிரதிவாரம் செவ்வாய் கிழமை  பையனின் வீட்டிக்கு மேற்குபுறத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலுக்கு சென்று மொச்சை +துவரை இவற்றை சிறு சிறு மூட்டையாக கட்டி (42 ) தலா 6 தீபம் வீதம் 7  வாரம் தீபம் போடவேண்டும். 7 வது வாரம் ஆஞ்சநேயருக்கு அபிஷேகம்  செய்து வெண்ணை சாத்தி வழிபாடு செய்யவேண்டும். அந்த வெண்ணையை உள்ளுக்கும் சாப்பிட 48 நாளில் குணம் தெரியும்.மேலும் வீட்டில் பையனின் தாயார் ஸ்ரீ பஞ்சமுக ஆஞ்சநேயர் மால மந்திரத்தை தினமும் காலை ,மாலை 12 தடவை தீபம் ஏற்றி வழிபாடு செய்ய சகல பீடைகளும்,பிணிகளும்,தோஷமும் விலகும்.

 ஸ்ரீ பகவதியின் பூரண அனுக்கிரகம் அந்த பையனுக்கு கிடைக்கும் சுபம்.
                                                               .