அன்புள்ள ஜோதிட அபிமானிகளுக்கு வணக்கம்.
மாண்புமிகு தமிழக முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்கள் இந்தியாவின் பிரதமராகவோ,அல்லது துணை பிரதமராகவோ வருவார் என அரசியல் உலகில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில் அதற்கான அமைப்பு ஜோதிடரீதியில் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களுக்கு அமையுமா?,என்பதை ஆய்வு செய்வதே இக்கட்டுரை.
செல்வி ஜெ.ஜெயலலிதா முதல்வராக பதவி ஏற்றது 2011-05-16.பகல் 12.47மணி.
அன்றைய கிரகநிலை:
எனவே மிதுன லக்.க்குஜீவனாதிபதி குரு(7.10.11)ஐ குறிக்கிறார். 7,10 க்குடைய குரு, கேதுசாரம் பெற்று 11ல். மேலும் 11ம் அதிபதிசெவ்வாய் கேதுசாரம் பெற்று லக்னத்தில் அமந்துள்ளார். லக்னாதிபதியும் கேதுசாரத்தில் 12ல் உள்ளார்.
மிக முக்கிய இடமான 9ல் சந்திரன் ராகுசாரத்தில் உள்ளார்.அந்தராகுவும்,11ல்குருவுடன் சேர்க்கை. உயர்பதவி எனும் இடம் மேஷம்,அதில்குரு,ராகுவுடன் பலமாக அமர்ந்துள்ளார்.முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்களின் லக்னம் சிம்மம். இதன் அதிபதிசூரியன் கோட்ச்சாரத்தில் மேஷத்திற்கு 10ல் உள்ளார் அதுவும் தனது சுய சாரத்தில் உள்ளதும் விசேஷம். 10ல் பகலவன் எட்டிப்பறிப்பான்.லக்னத்தில் உள்ள 6, 11, க்குடைய செவ்வாய் 8ம் பார்வையாக சூரியனை பார்க்கிறார்.
உலக லக்னம் என்பது மேஷத்தை குறிக்கும்.ஒவ்வொரு நாடு,ஒவ்வொரு மாநிலம் இவைகளின் தலைமையிடம் ராசியில் மேஷத்தை தான் குறிக்கும்.மிதுன லக்னத்திற்கு 11ல் ராகு கேதுவின் சாரத்தில்(மூலம் நட்சத்திரம்)இருப்பதும்,மூலம் ஆஞ்சனேயர் பிறந்த நட்சத்திரம் என்பதால் அதிதபலத்தை 11ம் பாவம் பெறுகிறது.தன் விருப்பம் என்று சொல்லக்கூடிய 5ம் வீட்டில் கேது உள்ளார். கேது துலாத்தில் உள்ளதால் அவர் சுக்கிரனைப்போல் பலனைக் கொடுப்பார். சுக்கிரனும் கேது சாரத்தில் 11ம்வீட்டுக்கு 2ல்(12) லக்னாதிபதி புதனுடன் அமந்துள்ளார்.இந்தியாவின் தலைநகரில் ஆட்சியில் மேஷம் முதல் இடம், ரிஷபம் 2மிடம். எனவே ஜெ.ஜெயலலிதா அவர்களுக்கு பிரதமராகும் தகுதி தனக்கு உண்டு என எண்ணுபவர்.
லக்னத்திற்கு ராஜ்ஜியம்,செயல் என்று சொல்லக்கூடிய 10ம் இடத்திற்கு கூட்டு என்றுச்சொல்லக்கூடிய 7ம்பாவாதிபதி புதன், 1,4க்குடையவராகி மேஷத்திற்கு 2ம் வீட்டில் சுக்கிரனுடன் அமர்வதால் மத்தியில் கூட்டணி ஆட்சி ஏற்பட்டு ஜெ.ஜெயலலிதா அவர்கள் துணைப்பிரதமர் ஆவார் என்பதை கிரக அமைப்பு சொல்கிறது.
எந்த கூட்டணி
5ம் வீட்டு அதிபதி சுக்ரன் ரிஷபத்தில். சுக்ரன் செந்தாமரையில் வாசம் செய்யும் லெஷ்மியைக் குறிக்கும்.எனவே தாமரையை சின்னமாக கொண்ட கட்சியுடன் கூட்டு வைப்பது உயர்பதவியை கொடுக்கும்.
5ல் கேது குருவின் சாரம். தனித்த குரு அந்தவீட்டை கெடுப்பார் என்றாலும், கேதுவை அதன் சார அதிபதியான குரு 11ல் இருந்து 5ம் இடத்தை பார்ப்பதால் இவர் தற்போதைய கூட்டணியுடன் பாராளுமன்ற தேர்தலில் நின்று வெற்றி பெற்று பின்பு தேசிய கட்சியுடன் கூட்டு ஏற்படும்.
மந்திரிசபை என்பது சிம்மராசியைக் குறிக்கும். வாக்காளர் என்பது கடகம்,விருச்சிகம்,கும்பம் ஆகிய ராசிகளை குறிக்கும்.ஜெ.ஜெயலலிதா அவர்களின் லக்னம் சிம்மம். இதன் அதிபதி சூரியன் இவர் ஜாதகத்தில் உச்சம்பெற்றுள்ளார். முதல்வராக பதவி ஏற்றகாலத்திலும் சூரியன் ராசிக்கு 10ல் அமர்ந்துள்ளார். கடகம்,விருச்சிகம்,கும்பம் ஆகிய ராசியின் அதிபர்கள் சந்.செவ்.சனி. இவர்கள் அனைவரும் பதவி ஏற்ற நேரத்தில் 1. 9.ம் வீடுகளை குறிப்பதால் தமிழக மக்களின் விருப்பமும் அம்மா அவர்கள் உதவிப்பிரதமராக வேண்டும் என்பது விருப்பம் ஆகும்.
அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு சுரியனை திசையாக கொண்டு தான் பலன் சொல்லவேண்டும்.அதன்படி அம்மாவுக்கு நடப்புதிசை சூரியன்.நடப்புபுத்தி குரு 8.3.2012 வரை.அதன் பின்பு சனிபுத்தி ஆரம்பம். அதில் சனியின்சுய அந்தரம் 2.5.2012நடைபெறுவதால் சூரியதசை, சனிப்புத்தியில் சனிஅந்தரம் முடிந்து புதன் அந்தரம் ஆரம்பிக்கும்போது மத்திய அரசில் மாற்றம் உண்டாகும்.எப்படி?
இதோ.
சூரியனை லக்னமாக கொண்டால் 6ல் சனிபுக்தி, 6,9ம்வீட்டிற்குடைய புதன், 6ம்வீட்டுக்கு 12லும், 9ம்வீட்டுக்கு 9பதிலும் உள்ளார்.மேலும் சூரியனுக்கு 5ல் புதன் காலமாற்றத்தை ஏற்படுத்துவார் என்பதைகாட்டுகிறது.எனவே 02.05.2012 க்கு பின்பு நாட்டில் பெருத்த மாற்றம் வரும் என்பதை கிரக நிலைகள் காட்டுகின்றன.பொறுத்திருந்து பார்ப்போம்.
வாழ்க P.H.R புகழ்..
வாழ்கவளமுடன்.
G.V.சர்மா.சேலம்.8.
2 comments:
ஐயா!
நம்ம கணிப்ப புறா மூலம் ஓலை அனுப்பினேனே! பார்த்தீர்களா? புறாவை ரோஸ்ட் பண்ணிட்டீங்களா? பதில் வரவில்லையே?
தயவுசெய்து பதில் ப்ளீஸ்.
நன்றி.
அன்பரே வணக்கம். தாங்கள் சுட்டிக்காட்டிய தவறு சரி செய்யப்பட்டுள்ளது.பைலில் இருந்து அப்லோட் செய்ததில் தவறு.சுட்டிக்காட்டியதற்கு நன்றி.
குறிப்பு.இன்றுதான் தங்கள் இ.மெயில் பார்த்தேன்.மீண்டும் நன்றி.
Post a Comment