Monday, October 17, 2011

ஆஞ்சநேயருக்கு வடைமாலை வழிபாடு செய்வது ஏன்.

அன்புள்ள ஜோதிட அபிமானிகளுக்கு வணக்கம். (PHR ன் G.V சிஸ்டம்)இன்று மேற்படிதலைப்பை ஜோதிட ரீதியாக ஆராய்ந்தபோது வந்த முடிவுகளை
கீழே கொடுத்துள்ளேன்.

ஆன்மீகத்தில் நாட்டம் உடையோர், தெய்வீக நம்பிக்கை உடையோர் அனைவரும் தமது காரியம் வெற்றிபெற கடவுளுக்கு தம்மால் முடிந்த காணிக்கை செய்தும் வேண்டிக்கொள்கிறார்கள். அது போலத்தான் மேற்படி ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாற்றுவது என்பதும்.

ஜோதிடத்தில் சுபவேளையில் செய்வதற்கு சுபஹோரை, சுபநட்சத்திரம், சுபதாரை என்று உள்ளது.சுபதாரை என்பது 9 வகையாக பிரிக்கப்படுகிறது.

1.ஜன்மம். 2.ஸம்பத்து. 3.விபத்து. 4.ஷேமம். 5.பிரித்தியரம். 6.ஸாதகம். 7.வதம். 8.மைத்ரம். 9.பரமைத்ரம். இவற்றை ஜோதிடர்கள் பெரும்பாலும் திருமணவிஷயத்தில் மட்டுமே பயன்படுத்துகிறார்கள்.இவற்றை எல்லாசமயங்களிலும் பயன்படுத்தி வெற்றிபெறலாம். 

எப்படி? இதோ அதற்கு உதாரணமாக ஆஞ்சநேயருக்கு வடைமாலை வழிபாடு.

ஆஞ்சனேயர்--மூலம் நட்சத்திரம். இதற்கு ஸாதகமான 6வது நட்சத்திரம் சதயம்.

சதயம் :
மிருகம்   - பெண்குதிரை
பட்ஷி     - காகம்
விருட்ஷம் - கடம்பு
அதிதேவதை - யமன்.

மேலும் சதயம் கொத்துக்கொத்தாக காய்க்கும் அனத்துக்கும் பொருந்தும்.

சதயம் நட்சத்திரம் ராகுவின் அம்சம் ராகு உளுந்துக்கு அதிபதி. சதயம் செக்குவையும் குறிக்கும். எண்ணை செக்கில் இருந்து எடுக்கப்படுகிறது.

மேற்காணும் விஷயங்களை சேர்த்துப்பார்த்தால் உண்மை புரியும்.

உளுந்தில் இருந்து மாவு எடுத்து எண்ணையில் போட்டால் வடை. 

வடையைமாலையாக தனக்கு பிடித்த எண்ணிக்கையில் ஆஞ்சனேயருக்கு சார்த்தி வழிபட்டால் தனது பக்தர்களுக்கு சேவை சாதிப்பார்.

சதயம் நட்சத்திர அதிதேவதை யமன் மரணபயம் நீங்கவும், தீர்க்காயுள் பெறவும், தங்கள் வேண்டுதல் நிறைவேறவும்,சாதகமாக அமைய 6வது
தாரையை பயன்படுத்தினால் வெற்றிநிச்சயம் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

1 comment:

aotspr said...

உங்கள் பகிர்வுக்கு நன்றி....

நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com

Post a Comment