Friday, August 20, 2010

ஒரு வினாடியில் ஜோதிட பலன் சொல்வது எப்படி ?

ஜோதிட அபிமானிகளுக்கு வணக்கம் மேலே உள்ள தலைப்பு வியப்பாகவும், ஆச்சரியமாகவும் இருக்கும் முடியுமா? என்று சந்தேகமும் வரும் காரணம் பல ஜோதிடர்கள் ராசி, அம்சம் பயன் படுத்தியும் சரியானபடி பதில் சொல்வதில்லை காரணம் என்ன. ஜோதிடத்தில் கிரக அடைவுகள் இருந்தால் மட்டும் போதாது ஜோதிடம் என்பது உலகில் பரவலாக உள்ளது என்று தெரிவதில்லை. உலகளாவிய விஷயங்கள் புராண இதிகாசங்கள் நட்சத்திர அதி தேவதைகள் மற்றும் நல்ல அனுபவங்கள் இவற்றைக்கொண்டு பலன்களை சொல்லவேண்டும். மேலும் பலன் சொல்லும் போது  பிரசன்னத்தையும் சேர்த்து சொல்லும் போது ஆச்சரியப்படும்படியும் இருக்கும் மேலும் சகுனம் -நிமித்தம் சேர்த்துக்கொண்டால் ஜோதிடரை கடவுளாகவே மதிப்பார்கள். வெளியில் செல்லும் போது சாப்பிடும்  போடு பேசும்போது
என இந்த மாதிரி சமயங்களில் நிகழும் விசயங்களையும் கணக்கில் கொள்ளவேண்டும் .
இதுபோல பல விசயங்களை நான்  PHR  ன் GV சிஸ்டம் மூலம் பலன் சொல்லி இருக்கிறேன் ஜோதிடம் பார்க்க வருபவர்கள் வரும் நேரம் ஓரை இவைகளை கணக்கிட்டு கொண்டால் வந்தது யார் எதற்காக வந்தார் அவர் நட்சத்திரம் திசை நடக்கிறது போன்ற வைகளை மிகவும் துல்லியமாக சொல்லலாம் .

உ-ம்கேள்வி :1


எனக்கு 4  குழந்தைகள்  நான் எந்த மகன் கூட இருப்பேன் என்பது அவரின்  கேள்வி


12 07 2010 காலை 9 .00 மணி அன்றைய கிரகநிலை  
கிரகம்               ராசி              அம்சம் 

லக்னம்            சிம்                  மிது
சூரியன்            மிது                ரிஷ   
சந்திரன்           கட                  கட
செவ்வாய்       சிம்                 விரு
புதன்                  கட                  துலா    
குரு                   மீனம்             கன்
சுக்ரன்              சிம்                  மிது
சனி                   கன்                 கும்
ராகு                  தனு                கன்
கேது                 மிது                மீன
மாந்தி              விரு               கன்

PHR ன் GV சிஸ்டத்தில் அம்ச லக்னம் பிரதானம் அதன்படி லக். மிதுனம் லக்னாதிபதி யும்  பஞ்சமாதிபதியும் பரிவர்த்தனை எனவே நீங்கள் முதல் மகனுடன் தான் இருக்கவேண்டும் என்றேன் ஒத்துக் கொண்டார் அவருடன் காலம் முழுதும் இருக்கலாம் எந்த சங்கடமும் இல்லை என்றேன் அவரும் எனது மருமகள்களில் மூத்த வர் நன்கு கவனித்து கொள்வதாகவும் அவர்களும் என்னை யாரிடத்திலும் போய் இருக்கவேண்டாம் என்று சொல்கிறார்கள் என்றும் சொன்னார்.

 2 வது  உ-ம் 

கேள்வி;ஆயுள் பயம் அடிக்கடி வருகிறது என் ஆயுள் எப்படி இருக்கும்?

13 .07 .2010 மதியம் 12 .05 மணி அன்றைய கிரகநிலை
கிரகம்                 ராசி                      அம்சம்  

லக்னம்             கன்                          சிம்    
சூரியன்             மிது                         மிது
சந்திரன்            கட                           தனு
செவ்வாய்        சிம்                          விரு
புதன்                  கட                            துலா
குரு                    மீன                           கன்
சுக்ரன்               சிம்                            மிது
சனி                    கன்                           கும்
ராகு                   தனு                           கன்
கேது                  மிது                            மீன 
மாந்தி                விரு                          கும்

அம்ச லக்னம் சித்திரை 1 இல் .இதன் சூட்சுமம் புதன்  புதன் சனி சாரம் சனி  சனி + மாந்தி யுடன்  சேர்ந்து லக்னத்தை பார்கிறார் எனவே அவர் கேட்ட கேள்வி ஆயுள் பயத்தை தான் கொடுக்கும்

ஆயுள் உண்டா இல்லையா?

ஆயுள் ஸ்தான அதிபதி ஆயுள் ஸ்தானதையும் ஆயுள் காரகர் சனி லக்னதையும் பார்ப்பதால் ஆயுள் உண்டு  மேலும் 6 ம் பாவம் பழமையும் உள்ளதாலும் சூரியன் சாரம் பெற்றதால் வாதம்,பித்தம்,கபம்,எனும் திரி தோஷம் உள்ளதால் இவர் ஜெயஹோமம், ஹௌடதம் இவைகளை கையாண்டால் மேற்படி பயம் விலகும் என கூறப்பட்டது
உ-ம்  கேள்வி :3

என் வீட்டில் மூக்குத்திக்கு வாங்கி வைத்த வைரம் காணவில்லை?
14 .07 .2010 பிற்பகல் 1 .30 மணி புதன் கிழமை கிரக நிலை
கிரகம்                 ராசி                   அம்சம்

லக்னம்              துல                      கும்
சூரியன்              மிது                     மிது
சந்ரன்                 சிம்                      மேஷ
செவ்வாய்         சிம்                      தனு
புதன்                   கட                        விரு
குரு                     மீன                       கன்
சுக்ரன்                சிம்                         கட
சனி                     கன்                        கும்
ராகு                    தனு                        கன்
கேது                  மிது                         தனு
மாந்தி               கன்                          கட

PHR  ன் GV சிஸ்டத்தில் அம்சம் பிரதானம். முதலில் கேள்வி உண்மையா?. அன்றைய லக்னம்  துலாம்/கும்பம். அதாவது சுவாதி 3 ல் லக்னம் கும்பத்திக்கு  3 ல் சந், மேலும் 6 ல் சுக், மாந்தி. சுக், வைரத்திக்கு உண்டானவர். கேள்வி உண்மை . லக்,சூட்சுமம் சனி,அதிசூட்சுமம் சூரி. பொருளாக கொண்டு சூட்சுமம் பார்த்தால் ராகு ஆகும். ராகு பூராடம் 2 ல்மேலும் உத்திரட்டாதி 2 ல் குரு உடன். பூராடம் -பட்டு, நகைகள்,வைரம்,லட்டு, மெட்டி, கொலுசு,சாளகிராம் இவைகளைகுறிக்கும்.எந்த ஒரு கேள்விக்கும் GV சிஸ்டத்தில் 10 ம் பாவம் காரியஸ்தானம் முக்கியம். இதோ சுவாதி 3 ல் ,10 ம் பாவத்திக்கு 5 வது நவாம்சமாக வரும்.   ராசியில் துலாதிக்கு 10 பாவத்திக்கு 5 வது நவாம்சம் விருசிகம். விருசிகத்தில்  புதன் அமர்ந்துள்ளார்.இங்கு கண்டிப்பாக ஒரு கிரகம் இருக்க வேண்டும் வீடு,மனை,வாகனம்,பொருள் எதுவாக இருந்தாலும்4 ம் பாவம் முக்கியம். 4 பாவம் மகாரம் இதன் 5 வது நவாம்சம் ரிசபம் எனவே விருச்சிகத்தில் உள்ள புதன் ரிசபத்தை பார்கிறார். மகம் 1 ல் சந்திரன் அன்று மதியம் 2 .16 வரை  இருக்கும். 2 ம் பாதம் இரவு 7 .40 வரை. எனவே வினா விடுத்தவர் பிற்பகல் 1 .30 மணி எனவே இன்னும் 46 நிமிடத்தில் ரிஷபத்தில் சந்திரன் 2 ம் பாதம் வந்து விடும் என்று கணக்கிட புதன் பார்வை படுவதாலும் ஸ்திர லக்லனத்தில் இருப்பதினாலும் அது வீட்டில் தான் இருக்கிறது என்பதை உறுதியாக கூற முடிந்தது.

அது எங்கு  உள்ளது?. பொருளின் சூட்சுமம் ராகு வந்ததால் அவர் குருவோடு கன்னி யில் உள்ளார். ராகு தெ.மேற்கு உண்டான கிரகம். எனவே வீட்டில் தெ.மேற்கில் உள்ளது என கூறப்பட்டது. கன்னி ராசி என்பது அலமாரி,புத்தகம் வைக்கும் இடம், பீரோ லாக்கர் இவைகளை குறிக்கும் என்றேன்.
அவர்கள் அங்கு எல்லாம் தேடி பார்த்து விட்டு தான் இங்கு பிரசன்னம் பார்க்க வந்தோம் என்றனர். அவசரப்பட வேண்டாம் இன்னும் சொல்ல வேண்டிய விஷயங்கள் உள்ளது என்றேன். பிற்பகல் 2 .16  க்கு  சந்திரன் ரிஷபத்தில் வரும். அப்போது மகம் 2 ல் சந்திரன். பொதுவாக சந்திரனின்  தானியம் நெல் . மகம் எனும் போது பாசுமதி, பச்சரிசி, எலி, குழி, பொந்து இவைகளை குறிக்கும். எலி, பொந்தில் வசிப்பதால் உங்கள் பீரோ லாக்கரில் கண்டிப்பாக இருக்கும். மேலும் உத்திரட்டாதி 2 ல் குரு,ராகு இருப்பதால், குரு- மஞ்சள் கலர், பச்சரிசி -சந்திரன்காரகர் ஏனெனில் சந்திரனை குரு 9 ம்பர்ர்வையாக பார்க்கிறார், குரு+சந்திரன்=மஞ்சள் அரிசி அதாவது அட்சதை என்றேன். அவர்கள் முகம் பிரகாசமானது. மேலும் புதன் வீட்டில் ராகு புதனாக மாறுவார் .குரு+புதன்=விஷ்ணு அம்சம். உத்திரட்டாதி என்பதால் அவதார புருஷன் படத்தில் அட்சதையுடன் இருக்கும் என்று மூளை வேலை செய்தது. அவர்களிடத்தில் மேற்படி விஷயத்தை சொன்னதும்,  அவர்கள் என்னிடத்தில் நாங்கள் ராகவேந்திரர் கோவிலுக்கு சென்று வந்தோம் அங்கு மந்திரட்சதை கொடுத்தார்கள் அதை பிரசாதம் என்பதால் எப்பொழுதும் பீரோ லாக்கரில் வைப்போம் என்றார்கள்.  எது எப்படி இருப்பினும் காரியஸ்தானதிபதிக்கு 5 வது நவாமசதிபதி பார்வை சந்திரனுக்கு  கிடைக்கும் போதுதேடிக்கொண்டு இருந்த வைரம் கிடைக்கும்.  விரு.அதிபதி செவ்வாய். இரவு 7 .40 க்கு சந்திரன் மிதுனம் பிரவேசிக்கும்போது செவ்வாய் பார்வையால் கிடைக்கும் என்றேன். இரவு 7 .50 மணிக்கு வைரம் கிடைத்ததாக எனக்கு 8 .11 மணிக்கு தொலைபேசியில் தகவல் சொன்னார்கள்





   






No comments:

Post a Comment